இரட்டை இலை - உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி!
Aug 15, 2025, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இரட்டை இலை – உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி!

Web Desk by Web Desk
Jan 20, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர் கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது என தெரிவித்திருந்தார்.

மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது என்றும், அந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தையே நாட அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags: ADMKadmk epssupreme court of indiaHigh Court decision
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனுவை வாபஸ் பெற்ற அதிமுக நிர்வாகி!

Next Post

சேதமடைந்த தரைப்பாலம் : சிரமத்திற்கு மத்தியில் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் நிலை!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies