சனாதன தர்மத்தை தழுவும் லாரன் பவல் ஜாப்ஸ் : இந்து மத கலாச்சாரத்தை கற்க விரும்பும் கோடீஸ்வர பெண்மணி - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்தை தழுவும் லாரன் பவல் ஜாப்ஸ் : இந்து மத கலாச்சாரத்தை கற்க விரும்பும் கோடீஸ்வர பெண்மணி – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 22, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ், சனாதன தர்மத்தை தழுவுவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோய் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் அறக்கட்டளை, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் 7.3 சதவீத பங்கு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் 38.5 மில்லியன் ஷேர்கள் ஆகியவற்றின் மரபுரிமை ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல் ஜாப்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 59-வது இடத்தையும், தொழில்நுட்ப துறையில் உள்ள பெண் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தார் லாரன் பவல் ஜாப்ஸ்.

இந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள லாரன் பவல் ஜாப்ஸ், இந்து மத போதனைகளால் ஈர்க்கப்பட்டு சனாதன தர்மத்தை தழுவுவது குறித்த விருப்பத்தை தனது ஆன்மிக குருவான சுவாமி கைலாஷ்னந்த் கிரியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து லாரன் பவல் ஜாப்ஸின் ஆன்மிக குருவான சுவாமி கைலாஷ்னந்த் கிரி, ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியும் அளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி லாரன் பவலுக்கு, இந்து முறைப்படி கமலா என்று பெயர் சூட்டப்பட்டு, அவருக்கென்று ஒரு கோத்ரம் ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, மகர சங்கிராந்தியன்று அவருக்கு தீட்சை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“MATERIALISM” எனப்படும் காணும் பொருளே உண்மை என்ற தத்துவத்தை உணர்ந்து அதன் உச்சத்தை கமலா அடைந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தற்போது அவர் சனாதன தர்மத்தை தழுவி தனது கலாச்சாரத்தை குரு மூலம் கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

கமலா என்கிற லாரன் பவல் ஜாப்ஸை மிகவும் எளிமையானவர், திமிர் அற்றவர் என குறிப்பிட்டுள்ள சுவாமி கைலாஷ்னந்த் கிரி, இரு பெரிய விமானங்களில் 50 பணியாட்களுடன் இந்தியாவிற்கு வந்தாலும், கமலா ஒரு சாதாரண பக்தரைப்போல 4 நாட்களாக கூடார நகரத்தில் தங்கியிருந்ததாக தெரிவித்தார்.

லாரன் பவல் மட்டுமல்ல உலகின் எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும் மகா கும்பமேளாவில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டவர்கள், திரிவேணி சங்கமத்தில் நீராடி, பல பஜனைகளை நிகழ்த்தி தங்கள் ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.

அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி பலதரப்பு பக்தர்களையும் இந்த மகா கும்பமேளா ஒன்றிணைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

Tags: sanatana dharmaKumbh MelaLaurene Powell JobsApple co-founder Steve JobsSteve Jobs FoundationSwami Kailashnand Giru
ShareTweetSendShare
Previous Post

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர் – வெளியானது பைரவம் திரைப்பட டீசர்!

Next Post

அதிபரான முதல் நாளிலேயே ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies