சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உன்னத போராளி நேதாஜி - சிறப்பு கட்டுரை!
Jul 24, 2025, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உன்னத போராளி நேதாஜி – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Jan 23, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நம் நாட்டின் விடுதலையை நாமே போர் புரிந்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் இன்று. சுதந்திரத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

1897 ஜனவரி 23…. இந்திய வரலாற்றிலும், சுதந்திர போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்த உன்னத போராளியை உலகுக்கு அறிமுகப்படுத்திய தினம். ஒடிஷா மாநிலத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக பிறந்தவர் தான் இந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்…

லண்டனுக்கு சென்று தற்போதைய ஐ.ஏ.எஸ் என்று அழைக்கப்படும் ஐ.சி.எஸ் பணியில் இருந்த நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், லண்டனில் இந்திய அமைச்சராக இருந்த மாண்டேகுவை ஒரு நாள் சந்தித்து, ஐ.சி.எஸ் பட்டத்தையும், அதனால் கிடைத்த பதவியையும் துறந்துவிடுவதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

ராஜினாமாவை ஏற்க மறுத்த அமைச்சர் மாண்டேகு, பல முறை வேண்டுகோள் விடுத்தும், தன்னுடைய முடிவில் இம்மியளவு கூட மாற்றமில்லை என்பதை சுபாஷ் சந்திர போஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

சுபாஷ் லண்டனில் இருந்தாலும் அவரின் எண்ணம் அனைத்தும் இந்தியாவிலேயே இருந்தது. லண்டனில் ஆங்கிலேயர்கள் சுதந்திரமாக வாழ்வதும், இந்தியாவில் மக்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதும் நேதாஜியின் மனதை உலுக்கிக் கொண்டே இருந்தது. சுபாஷ் சந்திர போஸின் ஆற்றலை அறிந்த தேசபந்து தாஸ், வங்கத்திலே ஒரு தேசியக் கல்லூரியை உருவாக்கி அதில் நேதாஜியை முதல்வராக அமரவைத்தார்.

25 வயது இளைஞர் கல்லூரித் தலைவர் பொறுப்பை ஏற்று அதனை வழிநடத்த முடியுமா என்ற கேள்விகளுக்கு பின்னாளில் நேதாஜியின் சிறப்பான செயல்பாடுகளே பதிலாக அமைந்தது.

1935ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நேதாஜி, வியட்நாமுக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஜெனிவா சென்று நோபல் பரிசுபெற்ற ரோமன் ரோலந்து எனும் புகழ்பெற்ற எழுத்தாளரை சந்தித்தார். அங்கு தங்கியிருந்த காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எழுதிய இந்தியப் போராட்டம் பற்றிய நூலை கண்டு அஞ்சி நடுங்கிய ஆங்கில அரசாங்கம், அந்த புத்தகத்தை இந்தியாவிற்குள் நுழைய தடைவிதித்துவிட்டது.

உயர்ந்த லட்சியத்தோடு, கொள்கை உறுதியோடும் விளங்கிய சுபாஷ் சந்திரபோஸ், வங்கத்தின் தலைவர் சி.ஆர் தாஸ் வழிகாட்டுதலோடு காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திய சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றார்.

1938ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வந்த நேதாஜியை, அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார் எனக்கூறி ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில், சிறையில் இருந்து தப்பித்த நேதாஜி, சுந்திர இந்தியா மையம் என்ற அமைப்பையும் தொடங்கினார்.

இந்தியா விடுதலைப் பெறுவதற்கு அண்ணல் காந்தியடிகள் கடைபிடித்துவரும் அன்பு நெறிகள் மட்டும் போதாது என்னும் கருத்து சுபாஷ் சந்திர போசுக்கு நீண்டகாலமாகவே இருந்தது. தன்னுடைய தீவிரமான கருத்தை ஒளிவு மறைவு இன்றி காந்தியடிகளிடமே தெரிவிக்கவும் செய்தார். இருந்தாலும் இந்திய விடுதலைப் போருக்கு காந்தியடிகளின் தலைமை தான் வேண்டும் என்பதில் அவர் அசையாத நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் இந்தியாவை ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து மீட்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களின் உதவியை நாடினார். நமது நாட்டின் விடுதலையை நாமே போர் புரிந்து கைப்பற்றியாக வேண்டும் என்பதாலே தாம் நாட்டை விட்டு வெளியேறி பிற நாட்டினரின் உதவியோடு இந்திய விடுதலைப் போரில் இறங்குவதாகவும், அதற்கு உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் என 1944 ஆம் ஆண்டு ஜூலை 6ம் தேதி சிங்கப்பூர் வானொலியின் மூலம் காந்தியடிகளுக்கு சுபாஷ் சந்திர போஸ் விடுத்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தாய்நாட்டை விட்டு தனிமனிதனாக வெளியேறி அயல்நாட்டில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய நேதாஜி, 1944ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக பெரும் போர் ஒன்றையும் நிகழ்த்திக் காட்டினார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி விமான விபத்தில் மர்மமான முறையில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின.

அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், அவரின் இறப்பு குறித்தும் இன்றளவும் பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகின்றன. வீரமிக்க அணுகுமுறையால் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரமும், தியாகமும் நாட்டு மக்கள் மனதில் எந்நாளும் நிலைத்திருக்கும்.

Tags: birth anniversary.Netaji Subhas Chandra bosetamil janam tvIndian National ArmyIndian freedom fighter
ShareTweetSendShare
Previous Post

நேதாஜி கண்ட இந்தியாவை கட்டியெழுப்ப பாடுபடுவோம் – பிரதமர் மோடி

Next Post

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 9 பேர் பலி!

Related News

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies