பணய கைதிகளுக்கு ஹமாஸ் "பரிசுப் பை" : இஸ்ரேல் - காசா மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்த போர் நிறுத்த ஒப்பந்தம்!
Aug 17, 2025, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பணய கைதிகளுக்கு ஹமாஸ் “பரிசுப் பை” : இஸ்ரேல் – காசா மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்த போர் நிறுத்த ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Jan 23, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருவது இரு நாட்டு மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

மேற்காசிய நாடுகளுள் ஒன்றான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த 2023-ம் ஆண்டு, அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலால் தொடங்கிய இந்த போர், 15 மாதங்களாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்து, பேரழிவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜனவரி 19-ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹமாஸ் தரப்பில் 33 பணய கைதிகளையும், இஸ்ரேல் தரப்பில் 990 பாலஸ்தீனிய கைதிகளையும் விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஜனவரி 20-ம் தேதி 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸும், அதற்கு ஈடாக 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளன.

471 நாட்களுக்கு பின் செஞ்சிலுவை சங்கம் மூலமாக இருதரப்பினரும் பணய கைதிகளை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிய நிலையில், குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்ட அனைவரும் கதறி அழுதபடி தங்கள் உறவினர்களை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் காண்போரை கண் கலங்கச் செய்தன.

அதேபோல, நாடு திரும்பிய பாலஸ்தீனியர்களை, மக்கள் தங்கள் பகுதிகளில் அணிவகுத்து நின்று உணர்ச்சி பூர்வமாக கோஷங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.

இதற்கிடையே ஹமாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் விடுவிக்கப்பட்ட 3 பெண் பணய கைதிகளிடமும் ‘பரிசு பைகள்’ வழங்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஹமாஸின் முத்திரை பதிக்கப்பட்ட அந்த பையில், ஒரு நெக்லெஸ், காசாவின் புகைப்படம், பிடிபட்டபோது எடுக்கப்பட்ட பணய கைதிகளின் புகைப்படம் மற்றும் விடுதலை பத்திரம் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.

ஹமாஸின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில ஹமாஸ் ஆதரவாளர்கள் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினர் நாடு திரும்பிய பணயக் கைதிகளிடம் இருந்து, ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொடுத்தனுப்பட்ட பைகளை பறிமுதல் செய்து சோதனையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 25-ம் தேதி முதல்கட்ட ஒப்பந்தப்படி மீதமுள்ள 30 இஸ்ரேல் பணய கைதிகளும், சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.

அடுத்த இரண்டு வாரங்களில் மிகவும் சவாலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், போர் முடிவுக்கு வந்து மக்களின் அச்ச உணர்வு முற்றிலுமாக நீங்கும் என்ற நம்பிக்கை இருநாட்டு மக்களிடையே உருவாகியுள்ளது.

Tags: hostage releaseisraeli hostages released by hamas given sick ‘gift bags’israel hamas hostage dealhostage release dealrelease hamas hostageshamas frees 3 hostageshamas releases hostageshamas gift bagshamas hostage release3 hostages freed by hamasHamas "gift bag" for hostagesIsrael-Gaza cease-fireisrael hamas warsigh of reliefhostagesisrael hamas hostage releaseisrael hamas ceasefirehamas hostages set freeisraeli hostageshamas hostages released
ShareTweetSendShare
Previous Post

டங்ஸ்டன் திட்டம் ரத்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

ஆய்வறிக்கையில் அதிர்ச்சி : இந்தியாவை சுரண்டி கொழுத்த பிரிட்டன்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies