திணறும் வங்கதேசம் : வேலையில்லா திண்டாட்டம் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்!
Aug 3, 2025, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

திணறும் வங்கதேசம் : வேலையில்லா திண்டாட்டம் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலையில்லா திண்டாட்டம், இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, கடந்த 6 மாதங்களில் வங்கதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்க தேசம், உலகின் ஏழாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். 17 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில்,ஏறத்தாழ 30 சதவீதம் இளைஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

2023ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட ஐந்தில் ஒருவருக்கு வங்கதேசத்தில் வேலை இல்லை. மேலும், ஐந்தில் ஒருவருக்கு அடிப்படை கல்விக் கூட தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.

வங்க தேசத்தைப் பொறுத்த வரை, வேலை இல்லாதவர்களில் 87 சதவீதம் பேர் படித்த பட்டதாரிகள் ஆவார்கள். ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடும் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களில், சுமார் 650,000 பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைப் பாதுகாப்பு, நல்ல வருமானம் மற்றும் கௌரவம் என்ற கனவில் பல இளைஞர்கள் அரசு வேலைகளைத் தேடுகின்றனர். அதனால் 6 மாதங்களுக்கு முன் வரை, பல்கலைக் கழக நூலகங்கள் சிவில்-சர்வீஸ் தேர்வுக்காக காத்திருக்கும் இளம் பட்டதாரிகளால் நிரம்பின. கடந்த ஆண்டு, வெறும் 3,300 அரசு பணியிடங்களுக்குச் சுமார் 3,46,000 பேர் தேர்வில் கலந்து கொண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வேலையில்லா திண்டாட்டம் அதிகமான சூழலில், 1971 ஆம் ஆண்டில் நடந்த வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் போராட்டங்கள் தொடங்கின.

இந்த விவகாரம் நீதிமன்றங்களில் மாறி மாறி விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, மாணவர் போராட்டங்கள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக திரும்பியது.

அதனால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா. நோபல் பரிசு பெற்ற யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது.

அதன்பிறகு, வங்க தேசத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நாட்டின் GDP வளர்ச்சி விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது என உலக வங்கி மற்றும் IMF இன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் வங்க தேசத்தின் பணவீக்கம் தற்போது 10.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், வெளிநாட்டு முதலீடு 177 மில்லியன் அமெரிக்க டாலர் என்று வங்கதேசத்தின் மத்திய வங்கி தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு, இதே காலகட்டத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் 614 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

உயரும் பணவீக்கம் நாட்டில் மேலும் அமைதியின்மையை உண்டாக்கக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

அரசு வேலையும் இல்லை,தனியார் வேலையும் இல்லை என்ற நிலையில், அடிப்படை தேவைகளுக்காக எந்த வேலையும் செய்ய தயாராக இருப்பதாக பல இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

84 வயதான முகமது யூனுஸ் தலைமையிலான அரசை 26 வயது மாணவர் தலைவர்களான நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் ஆகியோரால் வழிநடத்தப்படுவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

வங்கதேசத்தில், முகமது யூனுஸை ஆட்சிக்குக் கொண்டு வந்த மாணவர் இயக்கத் தலைவர்களே, இப்போது வங்க தேச நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் மிகவும் கடினமான சவாலை முகமது யூனுஸ் சந்திக்கிறார் என்பதே உண்மை.

Tags: bangaladesh issueStifling BangladeshUnemployment is a risk of rebellion
ShareTweetSendShare
Previous Post

“உயிர் விடுவதை தவற வேறு வழி இல்லை” : முளைத்த பயிர்களால் மூழ்கிய வாழ்க்கை – கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகளின் அவலம்!

Next Post

எவரெஸ்ட்டை விட இரு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு? நெதர்லாந்து விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல் – சிறப்பு கட்டுரை!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies