"உயிர் விடுவதை தவற வேறு வழி இல்லை" : முளைத்த பயிர்களால் மூழ்கிய வாழ்க்கை - கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகளின் அவலம்!
Jul 24, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

“உயிர் விடுவதை தவற வேறு வழி இல்லை” : முளைத்த பயிர்களால் மூழ்கிய வாழ்க்கை – கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகளின் அவலம்!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளை பெரும் கவலையடைய செய்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..!

வானம் பார்த்து விவசாயம் செய்யும் மானாவாரி நிலங்களில் பெய்யும் மழை விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும். ஆனால், பருவம் தவறி பெய்யும்போது அந்த மழையே அவர்களை பெரும் கவலையில் மூழ்கடித்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போது அந்த கவலைதான் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுக்காவைச் சேர்ந்த விவசாயிகளை வாட்டி வதைத்து வருகிறது.

சிறைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் அளவில், ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெல் சாகுபடி செய்திருந்தனர். விவசாயிகள் போட்ட கடும் உழைப்பிற்கு பலனாக நன்கு விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், அப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை அந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது.

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் சாய்ந்து வீணானதுடன், விளை நிலங்களில் தேங்கி நின்ற தண்ணீரால் விளைந்த நெல் மணிகள் மீண்டும் முளைக்கவும் தொடங்கின. இதனால் தங்கள் பயிர்களை அறுவடையை செய்து பயிர் கடன்களை அடைக்கலாம், நல்ல லாபம் ஈட்டலாம் என எண்ணியிருந்த விவசாயிகளின் கனவு பொய்த்துப் போயுள்ளது. அரசு இயந்திரங்கள் ஆய்வு நடத்தி தங்களுக்கு உரிய நஷ்டயீடு வழங்காவிட்டால், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தங்களுக்கு தற்கொலை செய்துகொள்வதை தவிற வேறு வழியில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியும், வங்கியில் தங்கள் நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்துள்ள நிலையில், எதிர்பாராத இந்த மழையால் ஏற்பட்ட நஷ்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த ஆளும் கட்சியினர், மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தங்களை தற்போது வந்து சந்திக்காதது ஏன் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மழைநீரில் மூழ்கி முளைத்த நெற்பயிர்களை அரசால் கொள்முதல் செய்யவோ, வேளாண் உற்பத்தி நிலையங்களில் விற்கவோ முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், 100 சதவீத பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்ற கூற்றுக்கேற்ப விளைந்து நின்ற நெற்பயிர்களை அறுவடை செய்து லாபம் பெற முடியாமல், பெரும் நஷ்டத்தில் வாடி தவிக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிர்வாகங்கள் கைகொடுக்குமா?  என்ற கேள்வி எழுந்துள்ளது

Tags: heavy rain fallramanatha puramLife drowned by sprouted cropsWoe to the tearful farmers
ShareTweetSendShare
Previous Post

செல்போன் இருந்தாலே போதும் : HIDDEN CAMERA-வுக்கு இனி பயப்பட வேண்டாம்!

Next Post

திணறும் வங்கதேசம் : வேலையில்லா திண்டாட்டம் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்!

Related News

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies