மனநலம் பாதித்த தாய், மகன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சம்பவம்!
Jan 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனநலம் பாதித்த தாய், மகன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சம்பவம்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகன் வெளியேறிய சம்பவம் சர்ச்சையாகியுள்ள நிலையில், சிசிடிவி பதிவுகளை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சிவகாமியம்மாள், அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக்கொள்ள அவரது இளைய மகனான பாலன் உடனிருந்தார்.

இவர்கள் இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படும் நிலையில், கடந்த 23ம் தேதி தனது தாயை மருத்துவமனையில் இருந்து பாலன் வெளியே அழைத்து வந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது தாய் சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையில், பாலன் தாயின் உடலை தனது சைக்கிளில் வைத்து கட்டி சொந்த ஊருக்கு தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகாமியம்மாள் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்பு உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியேறும் முன்பே உயிரிழந்தாரா என்பது உறுதி செய்யப்படாததால் மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி பதிவுகளை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், சம்பவம் நடந்து ஒருவாரமான நிலையிலும் சிசிடிவி பதிவுகளை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Mentally ill mother and son leave the hospital!
ShareTweetSendShare
Previous Post

வேங்கைவயல் வழக்கு : தலைமை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர்!

Next Post

தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies