இந்து முன்னணியின் போராட்ட அறிவிப்பு காரணமாக மதுரையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்து முன்னணியினர் நாளை திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனிடையே திருப்பரங்குன்றம் மலை குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால், அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணா போன்றவை நடத்தக்கூடாது என, இன்று மற்றும் நாளையும் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.