பொறியியல் படிப்புக்கான JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடந்தது. சுமார் 13 லட்சம் பேர் எழுதினர்.
இதன் முடிவுகள் வரும் 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
jeemain.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.