மனிதாபிமானத்தின் மறுவடிவம் '515 கணேசன்'!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மனிதாபிமானத்தின் மறுவடிவம் ‘515 கணேசன்’!

Murugesan M by Murugesan M
Feb 3, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு ஒரு துன்பம் என்றால் கூப்பிட்ட உடன் ஓடோடி உதவி செய்யும் 515 கணேசனை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம்…. யார் இந்த 515 கணேசன்… பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.

ஆலங்குடியில் எளிமையாக வசித்து வரும் கணேசன் என்பவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை தலையாய கடமையாக கொண்டவர். 76 வயதிலும் துடிப்போடு சமூக சேவை ஆற்றி வரும் இவரை, கணேசன் என்று சொல்வதை விட 515 கணேசன் என்றே மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.

காரணம் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் விற்று அவர் வாங்கிய அம்பாசிடர் காரின் பதிவெண் அது. காலப்போக்கில் அதுவே அவரது அடையாளமாக மாறிப்போனது.

ஆதரவற்றோருக்கு ஒரு துயரம் என்றால் 515 கணேசனால் சிறிதும் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் உயிர் வாழும் போது தேவைப்படும் உதவி முதல் இறந்த பின்னர் உடலை நல்லடக்கம் செய்வது வரை அனைத்து வேலைகளையும் கூட நின்று செய்வார்.

56 ஆண்டுகளாக இந்த தலைசிறந்த சேவையாற்றி வரும் 515 கணேசன், தனது அம்பாஸிடர் காரிலியே உடலை கொண்டு சென்று நல்லடக்கம் செய்யும் பணியை மேற்கொள்வார். ஆரம்பகாலத்தில் அவரை ஏளனமாக பார்த்த சமூகத்தில், கொரானா காலத்திற்கு பிறகு புகழ் வெளிச்சம் கிடைத்ததோடு, தங்களது பெருமையே கணேசன் தான் என மார்தட்டி கூறுகின்றனர்.

பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து அதில் கிடைக்கும் 500, 1000 ரூபாய் வருவாய் டீசல் செலவுக்கே போதவில்லை என்று புன்னகையுடன் கூறுகிறார் 515 கணேசன். 76 வயதிலும் ஓய்வின்றி பம்பரமாக சுழன்று சேவையாற்றும் கணேசனின் சுறுசுறுப்பிற்கு காரணம் கேட்டால், எல்லாம் நான் செய்த புண்ணியம் தான் என்று கூலாக பதில் சொல்கிறார்.

உதவும் எண்ணம் கொண்ட கணேசன் ஏழ்மையில் வாடுவதை கண்டு வேதனையடைந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்த செலவில் ஆலங்குடி பகுதியிலேயே வீடு ஒன்றைக் கட்டித் தந்து உதவி இருக்கிறார். அந்த வீட்டில் தான் தற்போது கணேசனின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கர்நாடகா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கும் நிலையில், அது தவிர 200-க்கும் மேற்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார் கணேசன்.

ஓட்டை உடைசலாக காணப்படும் காரில்தான் தன்னுடைய சேவை பணியை மேற்கொள்வதாக கூறும் 515 கணேசன், அதனை சரி செய்ய யாராவது உதவினால் ஏற்றுக்கொள்வேன்…. மாறாக நானாக யாரிடமும் உதவி கேட்க மாட்டேன் எனக் கூறுகிறார்.

பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். அந்த வரம் பெற்று வாழும் 515 கணேசன் மற்றவர்களுக்கு கிடைத்த வரம் என்றால் மிகையில்லை.

Tags: ambulanceAlangudiPudukkottai DistrictThe reimagining of humanity is '515 Ganesan'!
ShareTweetSendShare
Previous Post

Apple CEO உறுதி : இந்தியாவில் விரைவில் Apple Intelligence!

Next Post

தொடர்ந்து அசத்தும் இஸ்ரோ : சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies