வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 1996, 2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.