திருப்பரங்குன்றம் விவகாரத்தில், பிரச்சனையை ஏற்படுத்தும் அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம், மதுரை மத நல்லிணக்க அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆட்சியர் சங்கீதாவிடம் மதுரை மத நல்லிணக்க அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மனு அளித்தார்.
அதில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இந்து மற்றும் இஸ்லாமியர் இடையே பிரச்சனையை உருவாக்கும் வகையில் செயல்படும் அமைப்பினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலைக்கு, சங்க இலக்கியத்தில் உள்ள தமிழ் பெயரான பரன் குன்றம் என பெயர் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வித பாகுபாடுமின்றி சமூக நல்லிணக்கத்தோடு அரசு செயல்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்தார்.