திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் கொரக்கை பகுதியை சேர்ந்த 8 பேர் பழனி முருகன் கோயிலுக்கு காரில் சென்றனர். தரிசனம் முடித்து மீண்டும் கடலூர் திரும்பிய போது, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்பற கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 8 பேரும் படுகாயமடைந்தனர்.