திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமனற நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்னிமா அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியரால் கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
144 தடை உத்தரவை பயண்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது என்றும், மேலும் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க அனுமதி வழங்கி நன்பகல் 2:15 மணிக்கு மேல் விசாரிக்கப்படும் என கூறினர். மனுதாரர் சுந்தர வடிவேல் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன் முறையீடு செய்தனர்