ஒரு பசுமாட்டின் விலை இத்தனை கோடியா? : ரூ.40 கோடிக்கு விற்பனையான நெலோர் ரக மாடு 'வியாடினா-19'!
Jul 27, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஒரு பசுமாட்டின் விலை இத்தனை கோடியா? : ரூ.40 கோடிக்கு விற்பனையான நெலோர் ரக மாடு ‘வியாடினா-19’!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசில் நாட்டில் ஒரு பசுமாடு இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஒரு பசுமாட்டை வாங்க கோடிகளை செலவழிக்க நேரிடும் என்பது நமக்கு நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராஸ் நகரில், 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் 40 கோடிகளை அள்ளிக்கொடுத்து ஒரு பசுமாட்டை வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

வயாடினா-19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நெலோர் ரக பசுமாடுதான் அத்தனை கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. அப்படி கோடிகளை கொட்டி வாங்கும் அளவிற்கு இந்த பசுமாட்டில் என்ன தனித்தன்மை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பெரும்பாலான பசு இனங்கள் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றிலிருந்து விதிவிலக்காக உள்ள ஒருசில இனங்களே, அதன் தனித்துவமான பண்புகளுக்காக மதிக்கப்படுகின்றன. பல கோடிகளுக்கு விற்பனையாகின்றன. இந்தியாவைச் சேர்ந்த பிராமன் (Brahman) பசுக்களையும், ஜப்பானைச் சேர்ந்த வாக்யு (Wagyu) பசுக்களையும் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டுகள். மிக தூய்மையானதாக கருதப்படும் இந்த பசுமாட்டினங்கள், எந்தவிதமான வெப்பநிலையிலும் உயிர்வாழும் தன்மை கொண்டதாக இருப்பதால், உலகளவில் அவற்றின் தேவை அதிகமாக இருக்கிறது.

‘வயாடினா-19’ என பெயரிடப்பட்ட இந்த நெலோர் ரக பசுமாடும் யாரும் எதிர்பார்க்காத வகையில், 40 கோடிகளுக்கு விற்பனையாகி தற்போது அப்படியொரு வரலாற்றை படைத்திருக்கிறது. மிக தனித்துவமான உடலமைப்பைக்கொண்ட இந்த பசுமாடு ஆயிரத்து 101 கிலோ எடைகொண்டது. இது ஒரு பசுமாட்டின் சராசரி எடையை விட இரு மடங்கு அதிகம்.  ‘வயாடினா-19’ அதன் உடல் அம்சங்களால், மிக வெப்பமான பகுதிகளிலும் உயிர்வாழும் தன்மை கொண்டதாக திகழ்கிறது.

தனித்துவமான உடலமைப்பு என்று சொல்லும்போதே புரிந்திருக்கும், ‘வயாடினா-19’ வெறும் விலையுயர்ந்த பசுமாடாக மட்டுமல்ல, வெள்ளை நிறத்தில் பளபளவென மின்னும் தோல் அமைப்பாலும், மிரளவைக்கும் பெரிய திமிலாலும் மிக அழகானதாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்த பசுமாடு, அமெரிக்காவில் நடந்த ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி வேல்டு’ (Champions of the World) போட்டியில் பங்கேற்று ‘மிஸ் சவுத் அமெரிக்கா’ (Miss South America) என்ற பட்டத்தையும் தன்வசப்படுத்தியிருக்கிறது.

Tags: The price of a cow is so many crores? : Nellore cow 'Viadina-19' sold for Rs.40 crore!cow in Brazil
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஒரு நிர்பயா? : இளம் பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல்!

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 72 % வாக்குகள் பதிவு!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies