சென்னையில் ஒரு நிர்பயா? : இளம் பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல்!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் ஒரு நிர்பயா? : இளம் பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2025, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில பெண் கடத்தப்பட்டது எப்படி ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சென்னை மாதவரத்துல தன்னோட தோழியோடு விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு வறாங்க. சேலத்துல இருக்க இன்னொரு தோழியை பாக்க போயிட்டு சென்னை திரும்புன அந்த இளம்பெண் 11 மணி போல கிளாம்பாக்கம் கருணாநிதி பஸ் ஸ்டாண்டுக்கு வராங்க. மாதவரம் போற பஸ்ஸ பிடிக்கிறதுக்காக பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்புறமா சூட்கேசோடா நின்னுட்டு இருந்த பொண்ணுக்கு முன்னாடி ஒரு ஆட்டோ வந்து நிக்குது. இரவு நேரத்துல பஸ் வராதுனும், வாங்க நான் போய் இறக்கி விடுறேனு அந்த ஆட்டோ டிரைவர் சொல்லியிருக்காரு… எப்படியாச்சும் தன்னோட விடுதிக்கு போயிடலாம்னு ஆட்டோவுல ஏறுராங்க அந்த இளம் பெண்.

மாதவரத்துக்கு போற சாலையில போகாம வண்டலூர் கிட்ட இருக்க வெளிவட்ட சாலையை நோக்கி அந்த ஆட்டோ போகுது… போகும்போதே, ஆட்டோ டிரைவர் ஒருபோன் பண்ணி பேசுறாரு. அந்த போன் கால்ல கட் பண்ண பத்து நிமிசத்துல ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான இடத்துல, 50 வயசுக்கு மேல இருக்க ரெண்டு பேர் ஆட்டோவுல ஏறுனத பாத்து அந்த பொண்ணு அதிர்ச்சியாகுறாங்க. ஆட்டோவுல நம்பி ஏறுன அந்த பொண்ணுகிட்ட டிரைவர் உட்பட மூனு பேரும் பாலியல் துன்புறுத்தல்ல ஈடுபட்டதா சொல்லப்படுது. ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான சாலைங்குறதால அந்த பொண்ணு போட்ட சத்தமும் யாருக்குமே கேக்கல.

அதுக்கு அப்புறம் அந்த பொண்ணு தன்னோட தோழிகளுக்கு வாட்ஸ் அப் மூலமா லொகேஷன அனுப்பி தன்னோட பிரச்னையை சொல்லிருக்காங்க. அத பாத்த தோழிங்க திருப்பி தொடர்பு கொண்டப்ப அந்த பொண்ணோட நம்பர் ரீச் ஆகல… அதுனால, அந்த தோழிங்க போலிசுக்கும் தகவல் சொல்லிருக்காங்க. கட்டுப்பாட்டு அறை மூலமா சுற்று வட்டாரத்துல இருக்க எல்லா போலீஸ் ஸ்டேசனுக்கும் தகவல் பறக்க, ரோந்தும் தீவிரப்படுத்தப்படுது.

பாதிப்புக்குள்ளான இளம்பெண்ணின் மொபைல் போன் சிக்னல வச்சு போலீஸ் நெருங்குறத பாத்த அந்த கொடூரக் கும்பல் குன்றத்தூர் கிட்ட ஒரு ஆட்டோவ நிறுத்தி அந்த பொண்ண கோயம்பேடு பஸ்டாண்டுல இறக்கிவிடச் சொல்லிட்டு தப்பிச்சு போயிடுறாங்க. ஆட்டோவுல ஏறுன பத்து நிமிசத்துல கதறி அழுத அந்த பொண்ணுகிட்ட ஆட்டோ டிரைவர் விசாரிச்சதுல 50 வயதுச்சுக்கு மேல இருக்க மூனு பேரு தன்னோட பேத்தி வயசுல இருக்க பொண்ண பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது தெரியவருது. கழுத்துல கத்தி வச்சு மிரட்டுனதாகவும், கழுத்துல நகக் காயங்கள் இருப்பதையும் காட்டுன அந்த பொன்னு, போலீஸ் ஸ்டேசனுக்கு போகச் சொல்லியிருக்காங்க.

பாதிக்கப்பட்ட பொன்ன தன்னோட ஆட்டோவுல ஏத்திக்கிட்ட நல்ல மனசு கொண்ட இன்னொரு ஆட்டோ டிரைவரு, போலீச தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை சொல்லியிருக்காரு. அதோட பாதிக்கப்பட்ட பெண்ண மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவங்க தோழிகலோட அனுப்பி வச்சுருக்காங்க போலீஸ். மேலும் கிளாம்பாக்கம் பஸ்டாண்ட்ல இருந்த சிசிடிவி கேமிரா மூலமா கொடூரச் சம்பவத்துல ஈடுபட்டவங்கள காவல்துறை தீவிரமா தேடிட்டு இருக்கு.

தமிழ்நாட்டுல ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரக்கூடிய நிலையில, இப்ப கிளாம்பாக்கம் கருணாநிதி பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்த இளம்பெண் ஒருத்தவங்க கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியிருக்க சம்பவம் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலயும் ஒருவிதமான பயத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்குனே சொல்லலாம்.

Tags: A Nirbhaya in Chennai?சென்னை கிளாம்பாக்கம்A young woman was abducted in an auto and sexually harassed
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் ஒளிருமா “நட்சத்திர ஏரி?” காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்!

Next Post

ஒரு பசுமாட்டின் விலை இத்தனை கோடியா? : ரூ.40 கோடிக்கு விற்பனையான நெலோர் ரக மாடு ‘வியாடினா-19’!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies