வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு மற்றும் நினைவிடத்தை சூறையாடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த மாணவர் போராட்டத்தில் பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதனையடுத்து, வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்து வருகிறார். வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தோ்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படாது என இடைக்கால அரசு திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரையாற்றுவார் என அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான சத்ரா லீக் அறிவித்தது.
இந்நிலையில், வங்கதேசத்தில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்தனர்.