வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் மனித உருவத்தின் சுடுமண் கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 3ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண்ணால் ஆன உருவபொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3 ஆயிரத்து 350க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித உருவத்தின் சுடுமண் கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, மனித உருவத்தின் சுடுமண் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கால் பகுதி கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.