சேலம் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மாணவி ஒருவரை சிவகுமார் போட்டோ எடுத்து, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சைல்டு லைன் அதிகாரிகள், தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் மீது, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.