எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் வடக்கு தலைமன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் 14 பேரையும் கைது செய்தனர்.
மேலும், மீனவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பிப்ரவரி மாதத்தில் மட்டும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.