பெங்களூரு சாலையோரத்தில் பிரபல பாடகர் எட் ஷீரன் முன்அனுமதியின்றி பாடல் பாடியதை கண்ட போலீசார், மைக் இணைப்பை துண்டித்த காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
இந்தியா வந்துள்ள பிரபல பாடகர் எட் ஷீரனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சாலையோரத்தில் எட் ஷீரன் பாடல் பாடிய போது காவல் அதிகாரி ஒருவர் கோபத்துடன் மைக் இணைப்பை துண்டித்ததற்கு அவசியம் என்ன என அவரது ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.