திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஏ.ஆர்.டைரி உரிமையாளர் ராஜசேகரன் உட்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது சோதனை மூலம் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து நெய் வினியோகம் செய்ய ஒப்பந்தம் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கைதான 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க திருப்பதி இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.