பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை எனில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.