புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த மலையகோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். தொடர்ந்து விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.