ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
Jul 30, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 28, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆவடி அருகே உள்ள நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு சில தினங்களாக ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திருநின்றவூரில் உள்ள நத்தமேடு ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது.

தொடர் மழை காரணமாக ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ட்ரோன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மழைக்காலங்களில் ஆண்டு தோறும் நத்தமேடு ஏரி நிரம்பி பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வீடுகளை தண்ணீர் சூழ்வதால் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும், ஏரியை தூர்வாராததால் தண்ணீர் வெளியேறி பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சென்னை அம்பத்தூர் CTH சாலை, தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு பணிபுரிய வரும் மக்கள் அம்பத்தூர் CTH சாலையையே பயன்படுத்துகின்றனர். அதேபோல் தென் மாவட்டங்களிலிருந்து மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகளும் இந்த சாலை வழியாகவே செல்கின்றன.

இந்நிலையில் தொடர் கனமழை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலை பள்ளங்களில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் சென்னை பாரிவாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதி மழை நீர் சூழ்ந்து தனித்தீவை போல காட்சியளிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மோன்தா புயல் காரணமாக சென்னை பாரிவாக்கத்தில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியே தனித்தீவு போல காட்சியளிப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மழைநீர் வடிகால் முறையாக அமைக்காததே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், தேங்கிய நீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: tamilnadu rainimdheavy rainavadirain alertweather updatelow pressurerain warningChennai metro logical deptNathamedu lakechennai rainNathamedu lake overflow
ShareTweetSendShare
Previous Post

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

Next Post

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies