தேனி மாவட்டத்தின் 19ஆவது மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், புதிதாக பொறுப்பேற்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், கோப்புகளில் கையொப்பமிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்,
பயனாளிகளுக்கும் அரசு திட்டங்களுக்கும் உள்ள இடைவெளியை சரி செய்து அவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கச் செய்வதே, தனது முதல் பணியாக இருக்கும் எனக் கூறினார்.