மணிப்பூரில் CRPF வீரர் ஒருவர் சக வீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக மேற்கு இம்பால் மாவட்டம் லாம்சாங் மாவட்டத்தில் CRPF முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் F-120 பட்டாலியனைச் சேர்ந்த வீரர் ஒருவர் முகாமில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தாக்குதல் நடத்திய வீரரும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக CRPF உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.