முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூன்று சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் என மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
2020-ம் ஆண்டில் சென்னை ஆழ்வார்திருநகர் லட்சுமிநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 3 சக்கர பேட்டரி குப்பை வாகனம், மோதியதில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுமி பலத்த காயம் அடைந்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், காயமடைந்த சிறுமிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
மேலும், முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களை பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.