நடப்பாண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது.
அதன்படி மார்ச் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளி 24 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 19 கோடியே 45 லட்சம் ரூபாய் ஆகும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 9 கோடியே 72 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.
அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவும் ஒவ்வொரு அணிக்கும், இந்திய மதிப்பில் 4 கோடியே 86 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை இந்திய மதிப்பில் 60 கோடி ரூபாய் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.