மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் புதிதாக கட்டியுள்ள இல்லத்திற்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
புதிய இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 5,000 ரூபாயை வழங்கிய ராஜேந்திரன், மீதமுள்ள பணத்தை வழங்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் அளித்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை உதவி பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது மறைவில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைதுசெய்தனர்.