ஆக்சல் இந்தியா நிறுவனத்தின் நிறுவனரும், சமீபத்தில் ‘பத்மஶ்ரீ’ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பிரசாந்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பத்மஶ்ரீ’ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பிரசாந்திற்கு இன்று தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தாக கூறியுள்ளார்.
இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவனராகவும், தொழில்நுட்பத் துறையில் தனது சீரான பங்களிப்பையும் தேசத்திற்காக நல்கி வரும் பிரசாந்த் பிரகாஷ் அவர்களுடன் வாழ்த்து தெரிவித்து உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.