சென்னை தி.நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாண்டிபஜாரில் 3 தளங்களுடன் கூடிய வணிக கட்டடத்திற்கு அனுமதி பெற்ற தனியார் கட்டுமான நிறுவனம், 10 தளங்கள் வரை கட்டியது.
இதையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்திற்கு சீல் வைத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், கட்டடத்தை இடிப்பது தொடர்பாக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்ததையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், 8 வாரங்களில் அனுமதில்லாமல் கட்டப்பட்ட தளங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.