மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு செயல்படுத்தும் 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதியை மத்திய அரசு கண்காணித்து வரும் நிலையில், இதில் சுமார் 62 சதவீதத்தை மாநில அரசுகள் பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
சுமார் 1.54 லட்சம் கோடி நிதியை மாநில அரசுகள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நிலையில், பயன்படுத்தப்படாத நிதிக்கு அதிக வட்டி செலுத்தும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
எனவே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாநில அரசுகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, இதன் மூலமாக திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும் என தெரிவிததுள்ளது.