பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்? : விடுதலையை அறிவிக்க பலுசிஸ்தான் முடிவு?
Jun 14, 2026, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்? : விடுதலையை அறிவிக்க பலுசிஸ்தான் முடிவு?

Murugesan M by Murugesan M
Feb 19, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலுசிஸ்தான் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் விடுதலையை அறிவிக்கக்கூடும் என்று பாகிஸ்தான் மதகுருவும், நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுதலைப் பிரகடனத்தை ஐநா சபை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது

வடமேற்கு பாகிஸ்தானின் குர்ரம் பகுதியில் வன்முறைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களுக்கு இடையே மோதல்கள் நடக்கின்றன. கடந்த நவம்பரில் மீண்டும் வன்முறை வெடித்ததில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

லோயர் குர்ரம் பகுதியில் அலிசாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடக்கின்றன. கடுமையான பதற்றம் காரணமாக குர்ராமில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் கனரக மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்கிக் கொள்வதும், கடைகள், வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களும் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல், அந்த பகுதி முழுவதும் வெளியுலக தொடர்பின்றி உள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல், பலமுறை, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், இன்னமும் வன்முறை தாக்குதல்கள் தொடர்கின்றன.

உள்ளூர் வணிகர்களுக்கு அரிசி, மாவு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்குவதற்காக வந்த 33 வாகனங்களும் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை ஏற்றிச் செல்லும் இரண்டு வாகனங்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில்,10க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர்.மேலும் 6 ஓட்டுனர்கள் கடத்தப் பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, பாகிஸ்தான் அரசு கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் தனது உரிமையை முற்றிலுமாக இழந்துவிட்டது என்று பாகிஸ்தான் மதகுருவும் நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், கனிம வளங்கள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது பாகிஸ்தானுக்கே பெரும் பிரச்னையாக மாறும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான், பலுசிஸ்தானின் பல பகுதிகள் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து செல்லத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பலுசிஸ்தான் மாகாணத்தின் ஏழுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் விடுதலையை அறிவிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, பலுசிஸ்தானில் உள்ள மாவட்டங்கள் விடுதலையை அறிவித்தால், ஐநா சபை அந்த மாவட்டங்களின் விடுதலையை ஏற்றுக்கொள்ளும் என்றும், அதுவே பாகிஸ்தானின் வீழ்ச்சியாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

Tags: பாகிஸ்தான்New Bangladesh in Pakistan? : Balochistan decision to declare independence?பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்?பலுசிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் அருகே விஷம் வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

Next Post

குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? : வானதி சீனிவாசன் கேள்வி!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies