பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்? : விடுதலையை அறிவிக்க பலுசிஸ்தான் முடிவு?
Nov 17, 2025, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்? : விடுதலையை அறிவிக்க பலுசிஸ்தான் முடிவு?

Web Desk by Web Desk
Feb 19, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலுசிஸ்தான் மாகாணத்தின் ஏழு மாவட்டங்கள் விடுதலையை அறிவிக்கக்கூடும் என்று பாகிஸ்தான் மதகுருவும், நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுதலைப் பிரகடனத்தை ஐநா சபை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது

வடமேற்கு பாகிஸ்தானின் குர்ரம் பகுதியில் வன்முறைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களுக்கு இடையே மோதல்கள் நடக்கின்றன. கடந்த நவம்பரில் மீண்டும் வன்முறை வெடித்ததில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

லோயர் குர்ரம் பகுதியில் அலிசாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடக்கின்றன. கடுமையான பதற்றம் காரணமாக குர்ராமில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் கனரக மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்கிக் கொள்வதும், கடைகள், வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களும் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல், அந்த பகுதி முழுவதும் வெளியுலக தொடர்பின்றி உள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல், பலமுறை, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், இன்னமும் வன்முறை தாக்குதல்கள் தொடர்கின்றன.

உள்ளூர் வணிகர்களுக்கு அரிசி, மாவு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்குவதற்காக வந்த 33 வாகனங்களும் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை ஏற்றிச் செல்லும் இரண்டு வாகனங்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில்,10க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர்.மேலும் 6 ஓட்டுனர்கள் கடத்தப் பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, பாகிஸ்தான் அரசு கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் தனது உரிமையை முற்றிலுமாக இழந்துவிட்டது என்று பாகிஸ்தான் மதகுருவும் நாடாளுமன்ற உறுப்பினருமான மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், கனிம வளங்கள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது பாகிஸ்தானுக்கே பெரும் பிரச்னையாக மாறும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய மௌலானா ஃபஸ்லுர்-ரஹ்மான், பலுசிஸ்தானின் பல பகுதிகள் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து செல்லத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பலுசிஸ்தான் மாகாணத்தின் ஏழுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் விடுதலையை அறிவிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, பலுசிஸ்தானில் உள்ள மாவட்டங்கள் விடுதலையை அறிவித்தால், ஐநா சபை அந்த மாவட்டங்களின் விடுதலையை ஏற்றுக்கொள்ளும் என்றும், அதுவே பாகிஸ்தானின் வீழ்ச்சியாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

Tags: பாகிஸ்தான்New Bangladesh in Pakistan? : Balochistan decision to declare independence?பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்?பலுசிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் அருகே விஷம் வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

Next Post

குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? : வானதி சீனிவாசன் கேள்வி!

Related News

வங்க தேச முன்னாள்  பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies