கிருஷ்ணகிரியில் சாலையில் சென்றவரை சிறுவர்கள் கொடூரமாக தாக்கி செல்போனை பறித்துச்செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த டேவிட் ராஜான் என்பவர் நேற்று முன்தினம் சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் பூந்தோட்டத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்வதற்காக பெங்களூர் சாலை வழியாக நடந்து சென்ற பொழுது அங்கு வந்த 3 சிறுவர்கள் திடீரென டேவிட் ராஜனை தாக்கியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த டேவிட் ராஜன் முகத்தின் மீது கற்களை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் படுகாயம் அடைந்த டேவிட் ராஜனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து டேவிட் ராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் குடிபோதையில் இருந்த மூன்று சிறுவர்கள் டேவிட் ராஜனை கடுமையா தாக்கி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து மூன்று சிறுவர்களையும் போலீசார் பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.