கன்னியாகுமரியில் மார்ச் 2ஆம் தேதி சேவாபாரதி நடத்தும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சிக்கு பந்தகால் நாட்டும் விழா நடைபெற்றது.
அமிர்தா பல்கலைக்கழக மைதானத்தில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்க்கும் கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாதா அமிர்தானந்தமயி கலந்து கொண்டு ஆசி உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான பந்தக்கால் நாட்டும் விழா நடைபெற்றது.
இதில் ஆர்எஸ்எஸ் மற்றும் சேவாபாரதி அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.