மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே போப் பிரான்சிஸின் இறுதி சடங்குக்கு ரகசியமாக ஒத்திகை மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவலை வாடிகன் மறுத்துள்ளது.