நாகை மாவட்டம் மேலாவாஞ்சூர் சிங்கமா காளியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.