இலங்கை கடற்கடையினரால் சிறை பிடிக்கப்பட்ட 32 ராமேஸ்வரம் மீனவர்களை மார்ச் 7ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மன்னார் கடல் எல்லை பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்தாகக்கூறி 5 விசைப் படகுகளையும், அதில் இருந்த 32 மீனவர்களையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை மார்ச் 7ஆம் தேதி வரை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.