ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, 11 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு உட்பிரிவு காவல் உதவி கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த ஷானாஸ், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை சைபர் குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் காவல் உதவி கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த ஆர்.உதயகுமாரும், ராமநாதபுரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பதவி வகித்த சிவராமனும் எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.மேலும், பதவி உயர்வு பெற்றுள்ள நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர்த்து, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 11 காவல் துறை உயரதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.