கோவில்பட்டியில் பாலியல் வன்கொடுமையில் தேடப்பட்ட நபரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வரும் இளம்பெண், தாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கோவில்பட்டியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய மாரி செல்வம், மாரியப்பன் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வந்தனர். ரகசிய தகவலின் பேரில் மாரியப்பனை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது தப்பியோட முயன்ற அவர் தடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் மாரி செல்வத்தை பிடிக்க சென்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து, அவரது இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் பொன்ராம் ஆகியோரும் காயமடைந்தனர்.