கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு காரணமாக சுவாச பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் போப் பிரான்சிஸுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளதாக சமீபத்திய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகன் வெளியிட்ட அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.