10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வுகள் : CBSE சொல்வது என்ன?
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வுகள் : CBSE சொல்வது என்ன?

Murugesan M by Murugesan M
Feb 27, 2025, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026ம் கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவுக் கொள்கையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சமீபத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (கேவிஎஸ்) மற்றும் நவோதயா வித்யாலயா (என்விஎஸ்) ஆகியவை கலந்து கொண்டன.

தேசிய கல்விக் கொள்கையின்படி, உலகளாவிய பாடத்திட்டத்தை இந்திய கல்வி முறையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்ற, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பரிந்துரைகள் கொடுக்கப் பட்டுள்ளன.

அதன் படி, தற்போதுள்ள தேர்வு முறையில் குறைபாட்டை மாற்றவும், தேர்வு குறித்த பயத்தைப் போக்கவும், மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.

ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, நடப்பு கல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்புக்கு இரு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதன்மையாக திறன்கள் மற்றும் கல்வித் திறமைகளைச் சோதிக்கும் வகையில் பொது தேர்வுகள் எளிமையாக்கப்படும்.

அனைத்து மாணவர்களும் எந்தவொரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு முறை மெயின் தேர்வையும், தேவைப்பட்டால், மதிப்பெண்ணை அதிகரிக்க மற்றொரு முறை ‘ இம்ப்ரூவ்மென்ட் ‘ தேர்வையும் எழுதிக் கொள்ளலாம்.

2026-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை முதல் கட்ட தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு, மே 5ம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை நடைபெறும்.

இரண்டு பொது தேர்வுகளையும் மொத்தம் 34 நாட்கள் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. மேலும், உள்ளீட்டு தேர்வுகளும் செய்முறை தேர்வுகளும் வரும் ஆண்டுகளிலும் ஒரேயொரு முறை மட்டுமே நடத்தப்படும்.

இரு முறை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அந்த மதிப்பெண் சான்றிதழை பத்தாம் வகுப்பு சான்றிதழாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டாலும், முழு பாடங்களையும் உள்ளடக்கிய கேள்விகள் தான் இரண்டு தேர்விலும் இடம்பெறும்.

மேலும், இரண்டு தேர்வுகளுக்கும், மாணவர்களுக்கு ஒரே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும், இரண்டு தேர்வுகளுக்கும் தேர்வு கட்டணம் முதலிலேயே கட்டவேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.

இந்த வரைவுக் கொள்கை குறித்து, தங்கள் கருத்துக்களைப் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரும் மார்ச் மாதம், 9 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இறுதிக் கொள்கை வகுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Tags: cbse10th Class Twice Annual General Exams : What CBSE Says?cbse 10thcbse 12th
ShareTweetSendShare
Previous Post

அச்சுறுத்தும் புற்றுநோய் மரணங்கள் : உலகளவில் இந்தியா 3ம் இடம் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி!

Next Post

அசத்தும் ஹைப்பர்லூப் திட்டம் : சென்னை – திருச்சிக்கு 30 நிமிடங்களில் பறக்கலாம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies