கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அடுத்த டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் எம்.புதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் ஆகியோர் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் பால்ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரையும் பால்ராஜ் கொலை செய்து நெய்வேலி அருகே உள்ள மணல் குவாரியில் புதைத்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய பால்ராஜ் மற்றும் தருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், விசாரணைக்காக நெய்வேலி அழைத்துச் சென்றபோது இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர்.
அப்போது, மணல் குவாரியில் உள்ள பள்ளத்தில் விழுந்து இருவரின் கால்களும் உடைந்தன. இதனை அடுத்து இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொலை வழக்கில் மற்ற நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.