போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி!
Aug 20, 2025, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி!

Web Desk by Web Desk
Feb 27, 2025, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராக கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த பணியாளர் மற்றும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட காவலாளி கைது செய்யப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011-ல் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் 12 வார காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகததால் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர்.

தொடர்ந்து போலீசார் சென்ற சிறிது நேரத்திலேயே சீமானின் பணியாளர் சுதாகர், வீட்டில் ஒட்டுப்பட்ட சம்மனை கிழித்தெரிந்தார்.

இதையறிந்த போலீசார் சம்மனை கிழித்தவர் குறித்து விசாரிக்க சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். அப்போது சீமானின் வீட்டின் காவலாளி அமுல்ராஜ் போலீசாரை தடுக்க முயன்றதால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து காவலாளி அமுல்ராஜை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவரை இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

அப்போது காவலாளி தான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என கூறி துப்பாக்கியை காட்டியதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து சம்மனை கிழித்த பணியாளர் சுதாகரும் கைது செய்யப்பட்ட நிலையில், நடந்த சம்பவத்திற்காக போலீசாரிடம் சீமானின் மனைவி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Tags: Naam Tamilar Katchi Chief Coordinator SeemanSeeman's wife apologized to the police!சீமான் மனைவி
ShareTweetSendShare
Previous Post

காசா குறித்த ஏ.ஐ வீடியோவால் சர்ச்சை!

Next Post

பழனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More

அண்மைச் செய்திகள்

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies