பீகாரில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த ஒருவர், தடுப்பின் மீது ஏறி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவர் மீது எதிர் திசையில் வந்த பைக்கும், சரியான பாதையில் சென்ற மற்றொரு பைக்கும் மோதின.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.