தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2025, 07:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள லட்சம்மாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூரில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி மேள தாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ராக்கப்பெருமாள் கோயிலில், சிவராத்திரியையொட்டி பாரிவேட்டை பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமிக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகை அடுத்த புதுகல்லார் மீனவ கிராமத்தில் உள்ள சீதாளம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சீதாளம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோயில் யானை மேல் கொடிப்பட்டம், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள முத்து காளியம்மன் தர்ம முனீஸ்வரர் கோயிலில் சிவராத்திரியையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து முளைப்பாரியை சுற்றி கும்மி நடனமாடி மகிழ்ந்தனர்.

Tags: Kariyapatti Lakshamal Temple KumbabhishekamThiruvallur Srinivasa Perumal Temple KumbabhishekamMuneeswarar temple near Kamudi
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழி ஆங்கிலம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies