பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக செபி முன்னாள் தலைவர் மாதவி புரி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக இருந்த மாதவி புரி, தன் பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதானி முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை எனவும் ஹிண்டன்பர்க் தெரிவித்ததை அவர் மறுத்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகவும், இதுகுறித்து நேர்மையான மற்றும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், மாதவி புரி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்ட நீதிமன்றம், 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டது.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள செபி, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.