தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 90 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதம் இரண்டு முறை எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
கோயில் தக்கார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், நிரந்தர உண்டியலில் இருந்து 3 கோடியே 9 லட்சம் ரூபாய் காணிக்கை பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரத்து 390 கிராம் தங்கம், 23 ஆயிரத்து 500 கிராம் வெள்ளி, 752 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.