ஈரானின் நிதியமைச்சர் ஹெம்மாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஈரானில் டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கு நிதித்துறை அமைச்சர் அப்தோல்நாசர் ஹெம்மாட்டியின் தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவர் மீது ஈரான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது மொத்தமுள்ள 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து நிதியமைச்சர் ஹெம்மாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.